Posts

Showing posts from August, 2019

அன்சாருல்லா வழக்கும் என்.ஐ.ஏ சோதனைகளும் !!

Image
அன்சாருல்லா வழக்கும் , என்.ஐ.ஏ சோதனைகளும் !! தற்போது தமிழ்நாட்டில் NIA (தேசிய  புலானாய்வு முகமை)  விசாரித்து வரும் வழக்கிற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் "தமிழ்நாடு அன்சாருல்லா வழக்கு" . கடந்த 09-07-19 அன்று என்.ஐ.ஏ Case RC-16/2019/NIA/DLI (Tamilnadu Ansarulla Case) ன்படி வழக்கு பதிவு செய்தது . அவ்வழக்கில் சென்னையை சேர்ந்த செய்யது முகம்மது புகாரி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ஹசன் அலி 2 வது குற்றவாளியாகவும், அதே ஊரை சேர்ந்த  ஹாரிஸ் முகம்மது 3 வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்ட (இபிகோ) குற்றப்பிரிவுகள் 120(B) , 121A, 122 மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்(உபா) பிரிவுகள் 17,18, 18-B, 38 மற்றும் 39 ஆகிய பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்கு பதிவு செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவில் " அன்சாருல்லா " என்ற அமைப்பை ஏற்படுத்தி இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தில் இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வரவும் , அதற்காக நிதி வசூலித்ததாகவும் என்.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளது. என்.ஐ.ஏ