Posts

Showing posts from 2020

SFI (எஸ்.எப்.ஐ) 50 ஆம் ஆண்டும் , நானும்..

Image
இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) 50 ஆம் ஆண்டு ! நானும் இந்திய மாணவர் சங்கத்தின் பயிற்சி பட்டறையில் அரசியல் பயின்றவன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.. கடந்த 2007 ல் எனது 19 ஆம் வயதில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் 2 ஆம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக் கொண்டிருந்த போது இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்தேன்.. அப்போது அண்ணன் பிரபு ஜீவன்   தான் மாவட்ட தலைவர். அதன் பிறகு முதல் போராட்டமே மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை உயர்த்திய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்திற்கு எதிராக தோழர் G.செல்வா தலைமையில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சென்று போராட்டம் நடத்தியது தான்.. நான் கலந்து கொண்ட முதல் போராட்டமே வெற்றி.. அதே போல் நான் சட்டம் பயில வேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு இந்திய மாணவர் சங்கத்தில் உருவானது தான்.. அந்த நேரம் பிஜேபி யின் ஏ.பி.வி.பி யை தளிர்விட கூட நாங்கள் அனுமதித்ததில்லை. மதவாத பிஜேபி யின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி(ABVP)  யினர் எவ்வளவோ முயற்சி செய்தாலும் கூட மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழக(MSU) மாணவர் பேரவை தேர்தலில் நாங்களே (SFI) முழுமையாக வெற்றியடைந்தோம். குமரி மாவட்டத்தை ச

மாணவருக்கு கல்விக்கடன் வழங்க மறுக்க கூடாது ! - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

Image
மாணவருக்கு கல்விக்கடன் வழங்க மறுக்க கூடாது ! கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த கல்லூரி படிக்கும் V.பிரணவ் என்ற 20 வயது மாணவர் உயர்நீதிமன்றத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனக்கு கல்விக்கடன் வழங்க மறுப்பதாக கூறி ஒரு ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். SBI கடக்கல் பிராஞ்ச், கொல்லம் அந்த மனுவின் மீதான இறுதி விசாரனை கடந்த 03-07-2020 அன்று கேரள உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி அனுசிவராமன் அவர்களின் முன்பு வந்தது. அந்த மனுவை  விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டில் Kerala High Court in W.P. (C) 19248/2019 என்ற வழக்கின் உத்தரவில் கூறப்பட்டதை  " மனுதாரரின் தந்தைக்கு தேவையான கடன் மதிப்பெண்(சிபில் ஸ்கோர்) இல்லை என்ற அடிப்படையில் கடன் கோரிக்கையை நிராகரிப்பது தன்னிச்சையானது மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய சுற்றறிக்கையின் விதிமீறல் (மாதிரி கடன் திட்டத்தின் அடிப்படை) "ஆகும். கேரள உயர்நீதிமன்றம் மேற்கோள் காட்டி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ள மாணவர் V.பிரணவ் என்பவரின் கல்விக் கடன் விண்ணப்பத்தை அவருடைய பெற்றோரின் கடன் த

தமிழக அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு ₹3000/- உதவித் தொகை அறிவிப்பு !

Image
தமிழக அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு ₹3000/- உதவித் தொகை அறிவிப்பு !  வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் பல ஆண்டுகளாக ஜனநாயக ரீதியில் போராடியும், தற்போது நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக போராடியுமே இந்த உரிமையை பெற முடிந்துள்ளது.. சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்த (Enrollment) வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகள் வரை மாதந்தோறும் ரூ.3000/- வழங்க தமிழக அரசு G.O.(Ms).No.246 தேதி 30-06-2020 ன் படி உத்தரவிட்டுள்ளது.. தமிழக முதல்வரின் அறிக்கை இது வழக்கறிஞர் படிப்பை முடித்து கஷ்டப்படும் இளம் வழக்கறிஞர்களின் நெருக்கடியை முழுவதுமாக தீர்க்காவிட்டாலும் ஓரளவாவது தீர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.. அதே போல் வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் வருமானத்திற்காக  கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதில் இருந்தும் இந்த உதவித் தொகை ஒரு குறிப்பிட்ட சதவீதம் இளம் வழக்கறிஞர்களை காக்கும்.. ஆனால் ரூ.3000/- என்பதை ரூ.5000/- ஆக உயர்த்தியும், 2 ஆண்டுகள் என்பதை 3 ஆண்டுகளாக அதிகப்படுத்தினாலும் வழக்கறிஞர் தொழில் மேலும் சிறக்கும். எனவே அதற்கான தமிழக அரசின் அறிவிப்பை எதிர்பார