SFI (எஸ்.எப்.ஐ) 50 ஆம் ஆண்டும் , நானும்..
இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) 50 ஆம் ஆண்டு ! நானும் இந்திய மாணவர் சங்கத்தின் பயிற்சி பட்டறையில் அரசியல் பயின்றவன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.. கடந்த 2007 ல் எனது 19 ஆம் வயதில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் 2 ஆம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக் கொண்டிருந்த போது இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்தேன்.. அப்போது அண்ணன் பிரபு ஜீவன் தான் மாவட்ட தலைவர். அதன் பிறகு முதல் போராட்டமே மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை உயர்த்திய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்திற்கு எதிராக தோழர் G.செல்வா தலைமையில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சென்று போராட்டம் நடத்தியது தான்.. நான் கலந்து கொண்ட முதல் போராட்டமே வெற்றி.. அதே போல் நான் சட்டம் பயில வேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு இந்திய மாணவர் சங்கத்தில் உருவானது தான்.. அந்த நேரம் பிஜேபி யின் ஏ.பி.வி.பி யை தளிர்விட கூட நாங்கள் அனுமதித்ததில்லை. மதவாத பிஜேபி யின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி(ABVP) யினர் எவ்வளவோ முயற்சி செய்தாலும் கூட மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழக(MSU) மாணவர் பேரவை தேர்தலில் நாங்களே (SFI) முழுமையாக வெற்றியடைந்தோம். குமரி மாவட்டத்தை ச