நோன்புக்_கஞ்சியும் !! மோதினாரும் !! (சிறுகதை)
நோன்புக்_கஞ்சியும் !! மோதினாரும் !! (சிறுகதை) அந்தப் பள்ளிவாசலில் நோன்பு காலத்தில் அசர் தொழுகை முடிந்தவுடன் மோதினாருக்கு முக்கிய வேலை ஒன்றை அந்த ஜமாத் நிர்வாகம் ஒதுக்கியிருந்தது.. அதாவது ஏழைகள் / பெண்கள் போன்றோர் வீட்டில் நோன்பு திறக்க பார்சல் நோன்பு கஞ்சி வாங்க ஒரு கூட்டம் வந்து வரிசையில் நிற்பார்கள்... அப்படி வரிசையில் நிற்பவர்களுக்கு அவர்கள் கொண்டு வரும் பாத்திரங்களில் கஞ்சி ஊத்திக் கொடுப்பது தான் அந்த வேலை ... கஞ்சி ஊத்தும் போது தலைவர் மோதினாருக்கு கொடுத்த கட்டளைப் படி ஒவ்வொருவருக்கும் 2 அல்லது 3 கரண்டி கஞ்சி ஊத்திக் கொண்டிருந்தார் மோதினார் ... அப்போது ஒரு பள்ளிவாசலில் அசர் தொழுதுவிட்டு கஞ்சி வாங்கிய காஜா பாய்... மோதினாரிடம் இன்னும் கொஞ்சம் ஊத்துங்க , வீட்டுக்கு வெளியூர்ல இருந்த ஆள் வந்திருக்காங்க என்று சொல்லவும் , மோதினார் சற்றும் தாமதிக்காமல் நோன்பு திறக்க வர்ரவங்களுக்கு கஞ்சி வேணும் பாய் , தட்டுப்பாடு ஆயிட்டுனா தலைவர் என்னைய தான் திட்டுவார், நீங்க வேனும்னா தலைவர் கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க அவர் சொன்னா கூட கொஞ்சம் கஞ்சி ஊத்துறேன் என்று சொல்லிக் கொண்டே