தமிழக அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு ₹3000/- உதவித் தொகை அறிவிப்பு !

தமிழக அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு ₹3000/- உதவித் தொகை அறிவிப்பு ! 


வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் பல ஆண்டுகளாக ஜனநாயக ரீதியில் போராடியும், தற்போது நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக போராடியுமே இந்த உரிமையை பெற முடிந்துள்ளது..

சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்த (Enrollment) வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகள் வரை மாதந்தோறும் ரூ.3000/- வழங்க தமிழக அரசு G.O.(Ms).No.246 தேதி 30-06-2020 ன் படி உத்தரவிட்டுள்ளது..

தமிழக முதல்வரின் அறிக்கை

இது வழக்கறிஞர் படிப்பை முடித்து கஷ்டப்படும் இளம் வழக்கறிஞர்களின் நெருக்கடியை முழுவதுமாக தீர்க்காவிட்டாலும் ஓரளவாவது தீர்க்கும் என்பதில் சந்தேகமில்லை..

அதே போல் வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் வருமானத்திற்காக  கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதில் இருந்தும் இந்த உதவித் தொகை ஒரு குறிப்பிட்ட சதவீதம் இளம் வழக்கறிஞர்களை காக்கும்..

ஆனால் ரூ.3000/- என்பதை ரூ.5000/- ஆக உயர்த்தியும், 2 ஆண்டுகள் என்பதை 3 ஆண்டுகளாக அதிகப்படுத்தினாலும் வழக்கறிஞர் தொழில் மேலும் சிறக்கும்.

எனவே அதற்கான தமிழக அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து தான் தமிழக சட்ட மாணவர்களும், இளம் வழக்கறிஞர்களும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள்..

வழக்கறிஞர் அல்பி நிஜாம்,
நெல்லை.
96 55 77 77 96

Comments

Popular posts from this blog

கலைஞர் எழுதிய குறிப்புரை !

14 நாட்கள் ஊரடங்கு ! எதெற்கெல்லாம் அனுமதி ? எதெற்கெல்லாம் அனுமதி இல்லை ?